திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூலை 2ல் சிறப்பு கிராம சபை கூட்டம்

திண்டுக்கல், ஜூன் 28: திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் செய்தல் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் 2024- 2025 செயல்படுத்திடும் பொருட்டு 306 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் ஜூலை 2ம் தேதி நடைபெறவுள்ளது என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் செய்தல் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் 2024- 2025 செயல்படுத்திடும் பொருட்டு 306 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் ஜூலை 2ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

இக்கிராம சபை கூட்டத்தில் கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் செய்தல் பயனாளிகள் தேர்வு ஒப்புதல் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் 2024-2025 பயனாளிகள் தேர்வு ஒப்புதல் ஆகிய பொருள் குறித்து விவாதிக்கப்படும். எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் 306 கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள், கிராம சபை கூட்டங்களில் தவறாது கலந்து கொண்டு விவாதத்தில் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை