திண்டுக்கல் அருகே பணம் பறித்த வாலிபர் கைது

திண்டுக்கல், செப். 17: திண்டுக்கல்லை சேர்ந்தவர் ராமு (43). இவர் சிலுவத்தூர் ரோடு காட்டுமடம் பகுதியில் நேற்று சென்று கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த யாகப்பன்பட்டி பகுதியை சேர்ந்த உதயா (எ) உதயகுமார் என்பவர் உடைந்த பீர் பாட்டிலை ராமுவின் கழுத்தில் வைத்து கொலை மிரட்டல் விடுத்து அவரிடமிருந்த பணத்தை பறித்துள்ளார். இதுகுறித்து ராமு புகாரில் திண்டுக்கல் தாலுகா எஸ்ஐ அருண் நாராயணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து உதயாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி