திசையன்விளையில் மரநாயை கொன்று சமைத்து தின்ற ஆட்டோ டிரைவர் இருவர் கைது

திசையன்விளை, ஜூன் 23: திசையன்விளை காமராஜர் பேருந்து நிலையம் எதிரே வேளாண் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் நேற்று இரவு ஆட்டோ டிரைவர்கள் அரியவகை விலங்கான மரநாயை கொன்று கறியை மட்டும் எடுத்துவிட்டு தலை, குடல் மற்றும் தோல் பகுதிகளை வேளாண் அலுவலகத்தின் முன்புள்ள டிரக்கர் ஸ்டாண்டில் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து டிரக்கர் டிரைவர்கள், நெல்லை சரக வன அலுவலகத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த வனக்காவலர் அஜித்தேவஆசீர், வேட்டை தடுப்பு காவலர் பேச்சிமுத்து ஆகியோர் மரநாயை கொன்றது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் மரநாயை வேட்டையாடி கறி சமைத்து தின்றது ஆட்டோ சங்கத் தலைவர் ஜெயக்குமார், ஆட்டோ டிரைவர் தாமரை என்பது தெரியவந்தது. இதையடுத்து வன பாதுகாப்புத் துறையினர், ஆட்டோ டிரைவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை