திங்கள்சந்தை பேரூராட்சியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி

திங்கள்சந்தை, அக். 12: தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு செட்டியார்மடம் அரசு நடுநிலைப்பள்ளி முதல் பெருங்கோடு சமூக நலக்கூடம் வரை நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணிக்கு பேரூராட்சி துணைத் தலைவர் றீத்தம்மாள் தலைமை வகித்தார். பேரணியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். இதில் கவுன்சிலர் சுஜாதா, பேரூராட்சி பணியாளர்கள், செட்டியார்மடம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

விழுப்புரம் அருகே பரபரப்பு திருமணமான 4 மாதத்தில் விவாகரத்து வரன் பார்த்தவருக்கு சரமாரி அடி உதை மாப்பிள்ளை மீது போலீஸ் வழக்குப்பதிவு

டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மது பாட்டில்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிப்பதை தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நாராயணசாமி பரபரப்பு பேட்டி