தா.மோ.அன்பரசனை ஆதரித்து ப.சிதம்பரம் வாக்கு சேகரிப்பு

ஆலந்தூர்: ஆலந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசனை ஆதரித்து தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நங்கநல்லூரில் நடந்தது. மாவட்ட தலைவர் நாஞ்சில் பிரசாத் தலைமை வகித்தார். செங்கல்பட்டு மாவட்ட தலைவர் செந்தில்குமார், ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக செயலாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசியதாவது: தமிழ் மொழி, இனம், கலாச்சாரத்திற்கு எதிரானவர்களை பல்லாக்கில் சுமந்து வருகிறார்கள் அதிமுக தலைவர்கள், மடியில் கனம் உள்ளதால் மோடி, அமீத்ஷாவுக்கு அஞ்சி நடுங்கி அதிமுக தொண்டர்களின் தரத்தை குறைத்துள்ளனர் என்றார், மத்திய அரசு பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலையில் மக்களை சுரண்டுகிறது. இதற்கு மாநில அரசு துணை போகிறது. மத்திய ஆட்சியாளர்களுக்கு தலையாட்டி பொம்மைகளாக தமிழக ஆட்சியாளர்கள் உள்ளனர். ரூ.5 ஆயிரம் கோடியை எடுத்து வைத்துவிட்டு, ரூ.12.110 கோடி விவசாய கடனை ரத்து செய்தால் ரிசவ் வங்கி எப்படி ஒப்புதல் அளிக்கும். மகளிர் சுயஉதவி குழுக்களின் கடன், நகைக்கடன், நெசவாளர்கள் கடன் என அறிவிப்பு இருந்தாலும் அதில் எத்தனை பேர், எவ்வளவு தொகை என குறிப்பிடப்படாமல் வெற்று பேச்சு அரசாக அதிமுக அரசு செயல்பட்டுள்ளது. ஆனால், வெற்றி நடைபோடும் அரசு என விளம்பரம் செய்து கொள்கிறார்கள். படித்த, விவரம் அறிந்த தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் நலனுக்கான பல திட்டங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை செயல்படுத்த உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து தா.மோ.அன்பரசனை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்….

Related posts

ஐதராபாத்தில் குழந்தைகளுக்கு தாமரை சின்னம்; தேர்தல் பிரசார விதிமீறிய வழக்கில் அமித்ஷா, கிஷன் ரெட்டி பெயர்கள் நீக்கம்

நாட்டுக்காக சாக தேவையில்லை வளர்ச்சிக்கு பணியாற்றுங்கள்: குஜராத் விழாவில் அமித் ஷா பேச்சு

ஒன்றிய பாஜ அரசு அமல்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் திமுக உண்ணாவிரத போராட்டம்: அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு