தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை மூச்சு திணறி சாவு

 

மூணாறு, செப். 30: கேரளா மாநிலம் மூணாறில் தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான சைலன்ட்வாலி எஸ்டேட், முதல் டிவிஷனை சேர்ந்த வினோத், ஷக்கினா தம்பதியினருக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்து 50 நாட்கள் ஆகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணியளவில் குழந்தைக்கு தாய்பால் கொடுத்துள்ளார்.

அதன்பிறகு காலை 7:00 மணிக்கு குழந்தையை பார்த்தபோது அசைவற்ற நிலையில் கிடந்துள்ளது. உடனடியாக மூணாறில் உள்ள டாடா ஹை ரேஞ்சு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். குழந்தைக்கு பால் கொடுத்தபோது அது மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததாக தெரியவந்தது. இச்சம்பவத்தில் தேவிகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி