தாயை தாக்கிய மகன் மீது வழக்கு

 

திருச்சுழி, ஜூலை 17:திருச்சுழி அருகே உள்ள மேலபாறைக்குளத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி மனைவி முத்தம்மாள் (65). இவரது மகன் முத்துக்குமார். முத்தம்மாள் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது வந்த முத்துக்குமார் சொத்துக்களை தனக்கு எழுதி தரக்கூறி சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த முத்தம்மாள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பரளச்சி போலீசார் முத்துக்குமார் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை