தாம்பரத்தில் ரூ.38 லட்சத்தில் கான்கிரீட் தளம், குடிநீர் தொட்டி: எம்எல்ஏ திறந்து வைத்தார்

தாம்பரம்: தாம்பரம், கடப்பேரி, ஜிஎஸ்டி சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து பணிமனையில் கான்கிரீட் தரை அமைத்து தர வேண்டும் என, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவிடம் போக்குவரத்து பணிமனை ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். இதை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.32 லட்சம் செலவில் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணிகள்  முடிவடைந்ததை தொடர்ந்து, எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா நேற்று முன்தினம் கான்கிரீட் தரையை பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.இதேபோல தாம்பரம் சானடோரியம் பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.6 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் நீர்த்தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் டி.காமராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்