தாசில்தார் அலுவலகத்தில் பிரதமர் மோடி படம்: ஆவடியில் பரபரப்பு

ஆவடி: ஆவடி தாசில்தார் அலுவலகத்தில் பிரதமர்மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோரின் புகைப்படங்கள் பாஜவினர் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் கே.என்.நேரு ஆவடியில் பல்வேறு ஆய்வு நிகழ்ச்சிகளுக்காக நேற்று வந்தார். இந்நிலையில் தாசில்தார் அலுவலகம் மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்களில் பிரதமர் நரேந்திர மோடி. ஜனாதிபதி திரெளபதி முர்மு ஆகியோரின்  புகைப்படங்கள் வைக்கப்பட்டது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அண்ணாமலை ஆவடி வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது அரசியல் நோக்கத்திற்காக வைக்கப்பட்டிருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்….

Related posts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை