ஆவடி: ஆவடி தாசில்தார் அலுவலகத்தில் பிரதமர்மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோரின் புகைப்படங்கள் பாஜவினர் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் கே.என்.நேரு ஆவடியில் பல்வேறு ஆய்வு நிகழ்ச்சிகளுக்காக நேற்று வந்தார். இந்நிலையில் தாசில்தார் அலுவலகம் மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்களில் பிரதமர் நரேந்திர மோடி. ஜனாதிபதி திரெளபதி முர்மு ஆகியோரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அண்ணாமலை ஆவடி வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது அரசியல் நோக்கத்திற்காக வைக்கப்பட்டிருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்….