தர்மபுரி, ஜூலை 6: தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில், ஒன்றிய அரசு புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதை கண்டித்து, நீதிமன்ற வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளர்கள் சிவம், சந்திரசேகர், மாவட்ட தலைவர்கள் தாஸ், முனிராஜ், ராஜாராஜம், வீராசாமி, தர்மன், சக்திவேல், சதாசிவம் மற்றும் திமுக வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.