தரங்கம்பாடி அருகே புதிய ரேஷன் கடை திறப்பு விழா

 

செம்பனார்கோயில், ஜூன்7: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே நல்லாடை ஊராட்சி கொங்கானோடை கிராமத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் கலந்து கொண்டு 160 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறும் வகையில் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து பேசினார். நிகழ்ச்சியில் திமுக தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம். தர், மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், ஊராட்சி மன்ற தலைவர் காவேரி ஜெய்சந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார், ஒன்றிய கவுன்சிலர் கிருபாவதி சிவக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை