தம்பதி தற்கொலை

நெல்லை: நெல்லையை அடுத்த பழவூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (45). ரைஸ்மில் நடத்தி வந்தார். விவசாய பணிகளிலும் ஈடுபட்டிருந்தார். இவரது மனைவி ராதிகா (37). இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. நேற்று காலை வெகுநேரமாகியும் வீட்டிலிருந்து இவர்கள் வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து தகவலறிந்த சுத்தமல்லி போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஆறுமுகம் வீட்டின் உத்திரத்தில் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது மனைவி கட்டிலில் இறந்த நிலையிலும் கிடந்தது தெரிய வந்தது. முதற்கட்ட விசாரணையில், குழந்தை இல்லாத விரக்தியில் தம்பதியினர் இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்….

Related posts

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு