தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வெப்பச்சலனம், தென்மேற்குப் பருவக்காற்றால் தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திருப்பூர், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை கோவை, தேனி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திருப்பூர், தென்காசி மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆக.9-ல் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஆகஸ்ட் 10-ல் நீலகிரி, கோவை, ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர். பெரம்பலூர், கடலூரில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் இதர மாவட்டங்கள், புதுவை காரைக்காலில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆக.11-ல் நீலகிரி, கோவை, தென்காசி, திண்டுக்கல், தேனியில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்யக்கூடும். தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்; சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும். வங்கக்கடலில் தென் கிழக்கு இலங்கையை ஒட்டிய தென் மேற்கு பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. அரபிக்கடலில் கேரளத்தை ஒட்டிய தென்கிழக்கு பகுதி, லட்சத்தீவு, கர்நாடக கரையோரம் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. அரபிக்கடலில் தென்மேற்கு, வடக்கு, மத்திய மேற்கு பகுதிகளிலும் பலத்த காற்று வீசக்கூடும். மணிக்கு 50 முதல் 70 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு 4 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை