சென்னை: தமிழ்நாட்டில் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் டெங்கு பரவி வருவதையும் வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சானிடைசர், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றாத வர்த்தக நிறுவனம், அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது….