சென்னை: தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநர் அனுமதி தர ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மாணவர்கள் உயர்கல்வி, வேலை வாய்ப்பு, எதிர்காலத்தை கருதி பல்கலை. பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி தர வேண்டும் என அவர் கூறியுள்ளார். மேலும் 2021-22 கல்வியாண்டில் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு 6 மாதத்துக்கு மேலான நிலையில் பட்டமளிப்பு விழா நடக்கவில்லை எனவும் மாணவர்களுக்கு நிலையான பட்டச்சான்றிதழ் வழங்காததால் உயர்கல்வி, வேலை வாய்ப்பு கை நழுவும் ஆபத்து உள்ளது எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்….