சென்னை: தமிழ்நாடு அரசின் தீவிர நடவடிக்கையால் டெங்கு நோய் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் டெங்கு பரவலை கட்டுப்படுத்தக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மொத்தம் 52 பேர் மட்டுமே டெங்கு நோய் பாதிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது….