‘தமிழர்களின் குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும்’ : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து!

சென்னை : தமிழக முதல்வராக பதவியேற்றிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், முடித்தே தீர வேண்டிய பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மக்களின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.’தமிழர்களின் குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும்’ – ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து!சுவாசிப்பதற்கு உயிர் காற்று கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிற இந்தப் பேரிடர் காலத்தில் நீங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தங்கள் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி அடையும் என்று நம்புகிறோம். தங்களுக்கும், ஆற்றலும் அனுபவம் நிறைந்த மாண்புமிகு தமிழக அமைச்சர் பெருமக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். தமிழகத்தின் உரிமைகளை மீட்க தமிழர்களின் ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், ‘முடியுமா நம்மால்’ என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம்… முடித்தே தீருவேன் என்பது வெற்றிக்கான தொடக்கம் என்ற கருணாநிதியின் வாசகத்தையும் மேற்கோள் காட்டியுள்ளார்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்