ஆலந்தூர்: நீட் விலக்கு மசோதா உட்பட தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 13 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி வழங்காமல் முடக்கி வைத்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், நாஞ்சில் பிரசாத், ரஞ்சன்குமார், சிவ ராஜசேகரன், டில்லிபாபு, அடையாறு துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்சென்னை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் முத்தழகன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில், தமிழக ஆளுநரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில், ஜெயக்குமார் எம்பி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விஷ்ணு பிரசாத், ரூபி மனோகரன், மயூரா ஜெயக்குமார், சிடி.மெய்யப்பன், திருமகன் ஈவேரா, அசன் மவுலானா, சுதா ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்….