தமிழகத்தில் 3 முகங்கள், 3 சின்னங்களுடன் பாஜக தேர்தலில் போட்டி போடுகிறது!: அரியலூர் பிரச்சாரத்தில் திருமாவளவன் பேச்சு..!!

அரியலூர்: தமிழகத்தில் 3 முகங்கள், 3 சின்னங்களுடன் பாஜக தேர்தலில் போட்டி போடுகிறது என்று அரியலூரில் மதிமுக வேட்பாளர் சின்னப்பாவை ஆதரித்து பிரச்சாரம் செய்த திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு 3 சின்னங்கள் உள்ளன; ஒன்று தாமரை, மற்றொன்று இரட்டை இலை, 3 வது சின்னம் மாம்பழம். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு 3 முகங்கள் உள்ளன; ஒன்று சொந்த முகம், அடுத்தது அதிமுக முகம், 3வது முகம் பாமக என்று திருமாவளவன் குறிப்பிட்டார். மேலும் பாஜக, பாமக-வுடன் இணைந்து அதிமுக சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.  …

Related posts

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சொல்லிட்டாங்க…