தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு: 3 மாவட்டங்களில் நாளை (13-12-2022) பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: கனமழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (13-12-2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.வடக்கு கேரளா அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சென்னை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மதியம் 3 மணி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து கனமழை காரணமாக நாளை (13-12-2022) திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (13-12-2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்….

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்