சென்னை: தமிழகத்தில் நாளை வரை 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதிகபட்சமாக ஆவடியில் 9, சோழவந்தான், நடுவட்டம், தாமரைப்பாக்கத்தில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் நாளை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டது. …