தமிழகத்தில் 1,289 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,289 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,80,857 ஆக உள்ளது. நேற்று 1,421 பேர் குணமடைந்தனர். கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று தனியார் மருத்துவமனையில் 8 பேரும், அரசு மருத்துவமனையில் 10 பேர் என 18 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் சென்னையில் 4 பேரும், கோவை, செங்கல்பட்டு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், கடலூர், ஈரோடு, மதுரை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபரும் என 18 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி இதுவரை 35,814 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மேலும், அதிகபட்சமாக நேற்று சென்னையில் 164 பேர், கோவையில் 137 பேர், செங்கல்பட்டில் 104 பேர் என 3 மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்