தமிழகத்தில் மேலும் 698 பேருக்கு கொரோனா: 15 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழக மருத்துவம்  மற்றும்   மக்கள்   நல்வாழ்வுத்துறை நேற்று    வெளியிட்ட    அறிக்கை: தமிழகத்தில்   நேற்று    1,02,043 பேருக்கு கொரோனா    பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 698 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த  எண்ணிக்கை 27,33,346 ஆக உள்ளது.  நேற்று      கொரோனாவில் இருந்து 746 பேர்   குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 26,88,888 ஆக  உயர்ந்துள்ளது. மேலும்,  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 15  பேர் நேற்று  உயிரிழந்தனர். அதன்படி கோவை, நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், செங்கல்பட்டு, சென்னை, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி  ஆகிய  மாவட்டங்களில் தலா ஒரு நபர் என 15 பேர்  உயிரிழந்துள்ளனர். இதுவரை     36,575 பேர்  உயிரிழந்துள்ளனர். …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்