சென்னை: தமிழகத்தில் நேற்று கொரோனா பாதித்த 17,456 பேர் ஒரே நாளில் குணமடைந்ததாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,50,635 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 26,981 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து கொரோனாவிற்கு 1,70,661 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 17,456 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 28,06,501 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில் அரசு மருத்துவமனைகளில் 12 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 23 பேரும் உயிரிழந்தனர். அதிகபட்சமாக நேற்று சென்னையில் 8007 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது….