தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: 600க்கு கீழ் குறைந்தது

சென்னை: தமிழகத்தில் நேற்று 597 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி 7 பேர்   உயிரிழந்துள்ளனர். இது குறித்து மருத்துவம் மற்றும்   மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று   1,02,947 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 597 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கொரோனாவால்   பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27,42,821 ஆக உள்ளது. நேற்று   கொரோனாவில் இருந்து 681 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,99,309 ஆக   உயர்ந்துள்ளது. மேலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர்  நேற்று உயிரிழந்தனர். மேலும்  அதிகபட்சமாக சென்னையில் 146 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவாகவே உள்ளது.   இதையடுத்து ஒரு மாவட்டத்தில் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை