தமிழகத்தில் கொரோனா தொற்று 20,421 குணமடைந்து வீடு திரும்பியோர் 33,161: சிகிச்சை பலனின்றி 434 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் நேற்று 20,421 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 33,161 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் சிகிச்சை பலனின்றி நேற்று 434 பேர் உயிரிழந்தனர். மேலும், இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்: தமிழகத்தில் நேற்று 1,74,982 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 20,421 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,37,233 ஆக உயர்ந்துள்ளது.  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 33,161 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,44,289 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேலும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 434 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் மொத்தம் 27,005 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நேற்றைய மொத்த பாதிப்பில் சென்னையில் 1,644 பேர், செங்கல்பட்டு 832, கோவை 2,645,  ஈரோடு 1,694, காஞ்சிபுரம் 352,  சேலம் 1,071, தஞ்சாவூர் 875,  திருவள்ளூர் 487,  திருவாரூர் 395,  திருப்பூர் 1,068, திருச்சி 590 பேர் திக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 20,421பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்