தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 439 பேருக்கு கொரோனா; ஒருவர் உயிரிழப்பு: தொற்றில் இருந்து 1,209 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் இன்று 60 ஆயிரத்து 707 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் புதிதாக 439 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் மேலும் 119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,003 ஆக உயர்ந்துள்ளது.  அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில்  1,209 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,04,611 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 6 ஆயிரத்து 393 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்….

Related posts

மாநில கல்லூரியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு லிப்ட் வசதியுடன் பிரத்யேக விடுதி: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்