தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது

 

கோவை, ஜூன் 3: கோவை வடவள்ளி குருசாமி நகர் நவாவூர் பிரிவை சேர்ந்தவர் குணசேகரன் (62). இவர் மகன் அரவிந்த் (30). டிரைவர். இவருக்கு மது போதை பழக்கம் உள்ளது. அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. இதனை குணசேகரன் கண்டித்தார். ஆனாலும் அரவிந்த் மது குடிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இது தொடர்பாக தந்தை, மகன் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த அரவிந்த் வீட்டில் இருந்த அரிவாளால் குணசேகரனை வெட்டினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். வடவள்ளி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அரவிந்தை கைது செய்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை