தட்டார்மடம் பகுதியில் திடீர் மழை

 

சாத்தான்குளம், அக்.7:தட்டார்மடம் பகுதியில் நேற்று மதியம் திடீரென மழை பெய்தது. சுமார் ஒன்றரை மணி நேரம் பெய்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 15ம்தேதியில் இருந்து தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படிவானிலை மையம் சார்பில் அறிவிக்கப்பட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வானிலை மையம் சார்பில் தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் நேற்று சாத்தான்குளத்தில் மழை பெய்யவில்லை. சாத்தான்குளம் அருகே தட்டார்மடம், இடைச்சிவிளை, உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் நேற்று மதியம் திடீரென மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்