தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 25 கிலோ பறிமுதல்

திருத்துறைப்பூண்டி, ஜூன் 23: திருத்துறைப்பூண்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 25 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் ஆணையின் படி, திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் பிரபாகரன் வழிகாட்டுதலின்படி சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி தலைமையில், நகரா ட்சி எல்லைக்குட்பட்ட கடைகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தி வீசி எரியக்கூடிய பிளாஸ்டிக் (நெகிழி) பைகள் மற்றும் டீ கப்புகள் போன்ற வை சுமார் 25 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1900 அபராதம் விதிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் மீண்டும் பயன்படுத்தாதவாறு சிறு, சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு இறுதியாக்கம் செய்வதற்கு சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்க ஆர்ஆர்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை