தடுப்பு சுவரை உடைத்து நின்ற சுற்றுலா வேன்

ஏற்காடு, செப்.21: ஏற்காடு குப்பனூர் மலைப்பாதையில், தடுப்பு சுவரை உடைத்து நின்ற சுற்றுலா வேன் விபத்தில் சிக்கியது. இதில் 20 பேர் சிறு காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஏற்காட்டை சுற்றி பார்க்க, தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் இருந்து, சுற்றுலா வேனில் குழந்தைகள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் நேற்று காலை ஏற்காட்டிற்கு வந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (26) மற்றும் 20 பேர் ஏற்காட்டை சுற்றி பார்த்து விட்டு மீண்டும் இரவு 7 மணி அளவில் மொரப்பூருக்கு செல்ல ஏற்காட்டில் கிளம்பினர்.

வேன் குப்பனூர் மலைப்பாதை ஆத்துப்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், திடீரென தடுப்பு சுவரை உடைத்து விபத்திற்குள்ளானது. இதில் வேனில் வந்த 20 நபர்கள் லேசான காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில், விரைந்து வந்த மருத்துவ குழுவினர் அனைவரையும் மீட்டு, வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், போலீசார் மாற்று வாகனம் மூலம், வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி