தஞ்சாவூரில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

 

தஞ்சாவூர், ஆக. 31: தஞ்சாவூர் செக்கடி பாலம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தஞ்சாவூர் மேற்கு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் வடக்குவாசல் பகுதியை சேர்ந்த கணேசன் மகன் அஜித் (வயது 24), சீனிவாசபுரத்தை சேர்ந்த செல்லையா (65) என்பதும், பொதுமக்களிடம் அரிவாளை காண்பித்து மிரட்டி அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் விற்பனைக்காக 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை வைத்திருந்ததும் தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்