சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.39,352-க்கு விற்பனையாகிறது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாரா வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் – ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது.இந்நிலையில், நகை பிரியர்களை அதிர வைக்கும் வகையில் இன்று தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 264 ரூபாய் உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) ரூ.83 உயர்ந்து 4,919 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 39,352 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் வெள்ளி 71.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 71,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது….