தக்கலையில் எம்சாண்ட் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

தக்கலை, ஜூன் 28 : தக்கலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அதிக பாரம் ஏற்றி வந்த 3 டாரஸ் லாரிகளை மடக்கினர். இந்த வாகனங்களில் எம் சான்ட் உள்ளிட்ட கனிமவளம் இருந்தது. இதற்கான அனுமதி சீட்டை கல்குளம் தாசில்தார் கண்ணன் மற்றும் வருவாய் துறையினர் பரிசோதித்த போது, எவ்வித அனுமதியும் இன்றி திருட்டுத்தனமாக கனிம வளம் எடுத்து செல்வது தெரியவந்தது. இது தொடர்பாக தாசில்தார் தக்கலை போலீசில் அளித்த புகாரின் பேரில் 3 டாரஸ் லாரி டிரைவர்கள், கல்குவாரி உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன் 3 டாரஸ் லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை