சிவகாசி, செப்.28: தகர செட்டில் பட்டாசு தயாரித்தவர் கைது செய்யப்பட்டார். சிவகாசி அருகே நாரணாபுரம் செல்வ காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வெற்றி செல்வம்(34). இவர் தனது வீட்டு அருகே தகர செட்டில் அனுமதி இன்றி பட்டாசுகள் தயாரித்தார். இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு போலீசார் அவரை கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.