தஞ்சை: தஞ்சையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமிநடராஜன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 36 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவசாயிகளிடம் வரும் 4ம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் மத்திய அரசு ஈடுபடுகிறது. இதில் போராட்டத்துக்கு முடிவு எட்டப்படவில்லை என்றால் அனைத்து மாநிலங்களிலும் போராட்டத்தை விரிவுப்படுத்துவது என போராட்ட ஒருங்கிணைப்புக்குழு முடிவு செய்துள்ளது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் வரும் 6-ம் தேதி முதல் சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்….