டெல்லி அணி வீரருக்கு கொரோனா உறுதி; டெல்லி – பஞ்சாப் இடையேயான நாளைய ஐபிஎல் போட்டி மும்பைக்கு மாற்றம்.!

டெல்லி: கொரோனா காரணமாக டெல்லி – பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான நாளைய ஐபிஎல் போட்டி வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. டெல்லி வீரருக்கு கொரோனா உறுதியான நிலையில் புனேவில் நடக்கவிருந்த போட்டி மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்டது. முதன்முதலாக ஐபிஎல் போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உடற்பயிற்சியாளர் பிசியோ பேட்ரிக் ஃபார்ஹார்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அணியில் உள்ள மற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.இந்த நிலையில், நாளை டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டத்தில் விளையாட டெல்லி அணி நேற்று புனே புறப்படுவதாக இருந்தது. பயணத்துக்கு முன்னதாக நடத்தப்பட்ட ரேப்பிட் சோதனையில் வெளிநாட்டு வீரர் ஒருவரும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, கொரோனா காரணமாக டெல்லி – பஞ்சாப் அணிகள் இடையே நடைபெறவிருந்த போட்டியானது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, புனேவில் நடைபெறவிருந்த போட்டி, மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது….

Related posts

நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடவில்லை: இந்திய அணி கேப்டன் கவுர் விரக்தி

கரீபியன் லீக் டி20 தொடர்: பார்படாஸை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது கயானா

குவாலியரில் நாளை வங்கதேசத்துடன் முதல் டி20 போட்டி: இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக்சர்மா-சஞ்சுசாம்சன் களமிறங்க வாய்ப்பு