தொண்டாமுத்தூர், ஏப்.30: கோவை அருகே தொண்டாமுத்தூர் அருகே உள்ள புதுப்பாளையம் வீரண்ணன் வீதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (23) டெம்போ ஓட்டுனர். இவர் தனது மனைவி அம்பிகாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு ஆளான ராஜ்குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையில் சண்டை சச்சரவு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று தனியாக இருந்த ராஜ்குமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.