சேந்தமங்கலம், செப்.8: எருமப்பட்டியை அடுத்த நவலடிப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல்(54), விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை, வரகூரில் உள்ள செல்லாண்டியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, மீண்டும் டூவீலரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். பவித்ரம் பெட்ரோல் பங்க் அருகே வந்த போது, பின்னால் வந்த மற்றொரு டூவீலர், இவரது டூவீலர் மீது மோதியது. இதில் தங்கவேல், மற்றொரு டூவீலரில் வந்த குகன்(26) ஆகியோர் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், தங்கவேல் வழியிலேயே உயிரிழந்தார். குகனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.