டூவீலர் மீது கார் மோதி வாலிபர் பலி

தேன்கனிக்கோட்டை, செப்.24: கிருஷ்ணகிரி மாவட்டம், கே.ஆர்.பி.,அணை அருகேயுள்ள நாகராஜபுரத்தை சேர்ந்தவர் சுந்தர். இவரது மகன் பழனி(21), தனியார் வங்கியில் பைனான்ஸ் கலெக்சன் செய்யும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, தேன்கனிக்கோட்டை பகுதியில் கலெக்சனை முடித்து விட்டு, டூவீலரில் ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். தேன்கனிக்கோட்டையில் இருந்து, ஓசூர் செல்லும் சாலையில் உள்ள தண்டரை பிரிவு ரோடு அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த கார் டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனி சம்பவ இடத்திலேயே உயிரிழநதார். இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

வார்டு குழு அலுவலக அறிவிப்பு பலகையில் மாநகர சாலையோர வியாபாரிகள் பட்டியல்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி: லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர்கள் கலெக்டரிடம் மனு

மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்