சேலம், செப்.20: சேலம் ஆட்டையாம்பட்டி அடுத்த வேலநத்தம் கருக்கம்பாளையத்தார் தெருவைச் சேர்ந்தவர் தனசேகர்(45). நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது ஆட்டையாம்பட்டி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த மணி(28) என்பவர் இருசக்கர வாகனத்தை திருடினார். அருகில் இருந்தவர்கள் அவரை கையும் களவுமாக பிடித்து ஆட்டையாம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். தனசேகர் அளித்த புகாரின் பேரில் போலீசார் மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.