டூவீலர் திருடிய கொத்தனார் கைது

வத்தலக்குண்டு, ஜூன் 6: வத்தலக்குண்டு பகுதியில் கடந்த சில மாதங்களாக டூவீலர் திருட்டு அதிகளவில் நடந்தது.இது தொடர்பாக வத்தலக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பொன்னிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கொத்தனார் மாடசாமி (44) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 8 டூவீலர்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் 4 டூவீலர்கள் வத்தலக்குண்டு பகுதியிலும், மற்ற 4 டூவீலர்கள் மற்ற மாவட்டங்களில் திருடப்பட்டதும் தெரிய வந்தது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை