டூவீலரில் கடத்திய கஞ்சா பறிமுதல்

 

தர்மபுரி, ஏப்.29: மாரண்டஅள்ளி போலீஸ் எஸ்ஐ ஜீவானந்தம் தலைமையிலான போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாரண்டள்ளி பச்சபள்ளி ரோடு பச்சையம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே டூவீலரில் வந்த 2 வாலிபர்கள் வாகனத்தை போட்டு விட்டு தப்பி சென்றனர். அங்கு சென்று போலீசார் பார்த்தபோது, பையில் 4 கிலோ கஞ்சா கடத்தி கொண்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய டூவீலரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

மீஞ்சூர் அருகே ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை

பெருவாயில் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம்: எம்எல்ஏ திறந்து வைத்தார்

தாமரைக்குப்பம் கால்வாய் மதகு சீரமைக்கும் பணி தொடக்கம்