டூவீலரில் இருந்து விழுந்தவர் பலி

 

தொண்டி, ஜூன் 2: தொண்டி அருகேயுள்ள எஸ்பி.பட்டினம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முனியசாமி (47). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் டூவீலரில் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனியசாமி நேற்று இறந்தார். இதுகுறித்து எஸ்பி.பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

சமயபுரம் டோல்கேட்டில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செங்கோட்டை அருகே கார்-மினிலாரி மோதல் திருச்சியை சேர்ந்த இருவர் பரிதாப பலி

பலப்படுத்தும் பணி தீவிரம் தொட்டியம் அருகே மரத்திலிருந்து குதித்த சிறுவன் உயிரிழப்பு