டூவிட்டரில் இளம்பெண் குறித்து அவதூறு கம்பெனி ஊழியர் கைது

ஆவடி: ஆவடி அடுத்த பட்டாபிராம், திரு வி.க நகர், துரைசாமி நாயுடு தெருவை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா (24). இவர் தனியார் கம்பெனி ஊழியர். இவர் தனது டூவிட்டர் பக்கத்தில் ஆவடி, சிந்து நகரைச் சார்ந்த 21வயது இளம்பெண் புகைப்படத்தை வைத்து, தனது தனியார் வங்கி கணக்கையும் பதிவிட்டுள்ளார். மேலும், இளம்பெண் ஆன்லைனில் பாலியல் தொழிலுக்கு அழைப்பது போல அவதூறாகவும் செய்தி வெளியீட்டுள்ளார். கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின்படி கமிஷனர் ஆவடி காவல் நிலையத்திற்கு அனுப்பி விசாரிக்க உத்தரவிட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த கார்த்திக் ராஜாவை நேற்று மாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்….

Related posts

செய்யாறில் இன்று திருமணம் நடக்க இருந்தது காஞ்சிபுரம் சென்ற மணப்பெண் கடத்தலா?

பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

16 ஆண்டு தலைமறைவு சாமியார் அதிரடி கைது