டீ கடைக்காரரை மிரட்டி பணம் பறித்த 3 பேர் கைது

சென்னை: சூளைமேடு லோகநாதன் தெருவை சேர்ந்த ராஜா (35), அரும்பாக்கம் 100 அடி சாலையில் டீக்கடை நடத்தி வருகிறார். கடந்த 13ம் தேதி இவர், கடையை மூடிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது, பைக்கில் வந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி, ராஜாவிடம் இருந்த 1,500 ரூபாயை பறித்து சென்றனர்.  இதுகுறித்த புகாரின் பேரில், சூளைமேடு போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரித்தனர். அதில், வடபழனி பக்தவச்சலம் காலனி 2வது ெதருவை சேர்ந்த யுகேந்திரன் (எ) யுகி (22), ஹையத் (25), வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த தமிழன்பன் (34) ஆகியோர் பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பைக்குகள், ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது….

Related posts

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து 14.5 லட்சம் கொள்ளை!

செய்யாறில் இன்று திருமணம் நடக்க இருந்தது காஞ்சிபுரம் சென்ற மணப்பெண் கடத்தலா?

பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு