டீக்கடைக்குள் புகுந்து சிகரெட்டை திருடி அரிவாளை காட்டி அட்ராசிட்டி செய்த போதை ஆசாமி: கெத்து காட்டியவரை கொத்தாக தூக்கிய போலீஸ்

 

வேடசந்தூர், ஜன. 10: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள்(52). இவர் அதே பகுதியில் டீக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் கடையில் யாரும் இல்லாததால் கடைக்குள் புகுந்த குடிபோதை இளைஞர் சிகரெட் பாக்கெட் ஒன்றை எடுத்துள்ளார். அதன் பின்னர் கடை மேஜையின் கீழே உபயோகத்துக்கு வைத்திருந்த அரிவாளை எடுத்து தனது இடுப்பில் சொருகி வைத்துவிட்டு கடையில் வெளியே கெத்தாக நின்றுள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் அந்த குடிபோதை இளைஞரை பிடித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குடிபோதை இளைஞரை பிடித்து விசாரித்த போது, அவரது பெயர் ராஜூ (30)என்றும் திண்டுக்கல்லை சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளார். அந்த இளைஞர் அளவுக்கதிகமான மது போதையில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் போலீசார் அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து, மறுநாள் வேடசந்தூர் காவல் நிலையம் வருமாறு கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். மேலும் அந்த குடிபோதை இளைஞர் கடைக்குள் சென்று திருடும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை