டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் பரபரப்பு பேரணாம்பட்டில் கனமழை

பேரணாம்பட்டு, அக்.4: பேரணாம்பட்டில் கனமழை பெய்தபோது டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் நள்ளிரவு வரை ஆங்காங்கே லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்தது. இதேபோல், பேரணாம்பட்டு பகுதியில் காலை முதல் பிற்பகல் வரை வெயில் சுட்டெரித்த நிலையில், மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்று வீசியது. இரவு சுமார் ஒருமணி நேரம் இடியுடன் மழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. அப்போது, பேரணாம்பட்டு லால் மஸ்ஜித் தெருவில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. தொடர்நது, மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீரமைத்தனர். பணிகள் முடிந்து சுமார் ஒருமணி நேரத்திற்கு பிறகு மின்சப்ளை வழங்கப்பட்டது.

Related posts

திருநின்றவூர் ஏரியில் ₹50 லட்சம் மதிப்பில் மதகுகளை சீரமைத்து, கால்வாய் சுத்தம் செய்யும் பணி தீவிரம்: நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி ஆர்எம்கே பள்ளி மாணவனுக்கு தங்கம்

கும்மிடிப்பூண்டி அருகே பயங்கரம்; ஓசியில் பொருள் கொடுக்காத ஆத்திரத்தில் மளிகைக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு