கிருஷ்ணகிரி, ஜூன் 12: கிருஷ்ணகிரி ஆலப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக இருப்பவர் சேகர். இவர் நேற்று முன்தினம் தாலுகா போலீசில் புகாரளித்தார். அதில், கிருஷ்ணகிரி அடுத்த சாந்தன்கொட்டாய் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ₹1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான 135 கிலோ எடை கொண்ட காப்பர் ஒயர் மற்றும் ₹32 ஆயிரம் மதிப்பிலான ஆயில் திருடு போயுள்ளது. இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.