டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி

தேன்கனிக்கோட்டை, ஜூன்14: தேன்கனிக்கோட்டை தாலுகா, கே.ஓசூர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சு(23). பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், அவ்வப்போது ஊருக்கு வந்து விவசாய வேலைக்கும் சென்று வந்தார். நேற்று முன்தினம், கே.ஓசூரில் உள்ள விவசாய நிலத்தில், டிராக்டர் மூலம் உழவு ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து தறி கெட்டு ஓடிய டிராக்டர், திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிராக்டர் அடியில் சிக்கி படுகாயமடைந்த சஞ்சு, சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சஞ்சு உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஒரு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்